மண்ணெண்ணெய் விநியோகத்தில் கட்டுப்பாடு!

Sri Lanka 1 வருடம் முன்

banner

மண்ணெண்ணெய் விநியோகத்தை விரைவில் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எரிசக்தி மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.





மண்ணெண்ணெய் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், இதனை தடுக்கும் வகையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார்.





தனியார் பஸ்கள் பல தற்போது டீசலுடன் மண்ணெண்ணெயை கலந்து இயக்கப்படுகின்றன.





மீன்பிடி நடவடிக்கைகள் உட்பட அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் எதிர்காலத்தில் மண்ணெண்ணை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.