5 கோடி பெறுமதியான கேரளக் கஞ்சாவுடன் ஒருவர் கைது!
Sri Lanka 1 வருடம் முன்
5 கோடி பெறுமதியான கேரளக் கஞ்சாவுடன் கிளிநொச்சி – விவேகானந்தா நகர் பகுதியில் விசேட அதிரடிப் படையினரால் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப் படையினருக்கு க் கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலின் அடிப்படையிலேயே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மன்னாரைச் சேர்ந்த ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 190 கிலோ கிராம் கேரளக் கஞ்சா மீட்கப்பட்டதுடன், சொகுசு கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
Related Posts