பரந்தனில் இரத்தக் காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்பு!
Sri Lanka 1 வருடம் முன்
கிளிநொச்சி, பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியில் இரத்தக் காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் நேற்றிரவு குற்றுயிராகக் கிடந்த ஒருவரை அவதானித்த கடை உரிமையாளர் ஒருவர் 1990 அவசர அம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பை எடுத்துத் தகவல் கொடுத்தார். அந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
மரணம் தொடர்பில் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது.
உயிரிழந்தவர் உடலில் போத்தலால் குத்தப்பட்டு அதிகளவு இரத்தப் பெருக்கெடுத்துக் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் அருகில் உள்ள சி.சி.ரி.வி. கமராவில் பதிவாகியுள்ளது.
இவரது மரணம் தொடர்பான விசாரணைகளைக் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் விசேட குற்றத் தடுப்புப் பிரிவு பதில் பொறுப்பதிகாரி மற்றும் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் முன்னெடுத்து வருகின்றனர்.
Related Posts