பச்சிளம் குழந்தை சடலமாக மீட்பு - மலையகத்தில் பயங்கரம்!

Sri Lanka 1 வருடம் முன்

banner

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை சிங்கள வித்தியாலயத்துக்கு அருகிலிருந்து இன்று (10) காலை பச்சிளம் சிசுவொன்றில் சடலம், லிந்துலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.





சுமார் 6 மாத காலம் நிறைவடைந்த சிசுவொன்றின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.





நுவரெலியா மாவட்ட நீதவானின் விசாரணைகளின் பின்னர், பிரேத பரிசோதனைக்காக சிசுவின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.





இது தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.