மாணவியை கடத்தி வல்லுறவு - சூத்திரதாரி கைது!

Sri Lanka 1 வருடம் முன்

banner

பிங்கிய பகுதியைச் சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவியை கடத்திச் சென்று , அனுராதபுரம், ருவான்வெல்ல, ஹன்வெல்ல, வெயங்கொட உட்பட பல பிரதேசங்களில் தடுத்து வைத்து துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய நபரை வெயங்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.





சிறுமி பிங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி என்றும் சந்தேகநபர் வெயங்கொட, எலுவாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமாகாத நபரென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.





பல மாதங்களாக மாணவியை ஒவ்வொரு இடங்களில் தடுத்து வைத்துக்கொண்டு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாகவும், வெயாங்கொட பகுதியில் உள்ள வீடொன்றில் மாணவியை தடுத்து வைத்திருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.





மாணவி வைத்திய பரிசோதனைகளுக்காக வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.