சட்டவிரோதமாக ஆஸி. செல்ல முற்பட்ட 6 சிறார்கள் உட்பட 38 பேர் கைது!

Sri Lanka 1 வருடம் முன்

banner

நீர்கொழும்பில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகில் செல்ல முற்பட்ட 6 சிறார்கள் உட்பட 38 பேர் கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.





கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் இன்று அதிகாலை 2 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.





படகிலிருந்த 38 பேரையும், வாழைச்சேனை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றதாக கடற்படையினர் தெரிவித்தனர்.





கைது செய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.





பொலிஸ் விசாரணைகளும் தொடர்கின்றன.