மரத்திலிருந்து விழுந்து சிறுவன் பலி - மலையகத்தில் சோகம்
மஸ்கெலியா, பிரவுன்லோ வனப்பகுதிக்கு தனது சகோதரனுடன் இன்று (12.06.2022) காலை வேளையில் விறகு சேகரிக்கச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன், மரத்திலிருந்து வழுக்கி விழுந்து பலியாகியுள்ளார்.
மஸ்கெலியா சமனெலிய சிங்கள மகா வித்தியாலயத்தில் தரம் 9ல் கல்வி பயிலும், மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த 14 வயதுடைய எஸ்.ஜே.ரஜிந்த துல்சான் குணசேகர என்ற மாணவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
சிறுவனின் சடலம் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையிலிருந்து, டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
Related Posts