தாயால் ஆற்றில் வீசப்பட்ட 5 வயது மகன் சடலமாக மீட்பு

banner

சிலாபம், வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வைக்கால் கடற்கரையில் கரையொதுங்கியிருந்த நிலையில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.





குறித்த சடலம், வத்தளை – கதிரான பாலத்திலிருந்து பெண் ஒருவரால் களனி ஆற்றில் வீசப்பட்டது எனக் கூறப்படும் 5 வயது சிறுவனுயடையதாக இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.





கடந்த 15ஆம் திகதி வத்தளை – ஹெந்தல – கதிரான பாலத்துக்கு அருகில் களனி ஆற்றில் தனது ஐந்து வயது மகனை வீசிவிட்டு, தனது உயிரையும் மாய்த்துக்கொள்ள முற்பட்ட தாய் பிரதேசவாசிகளால் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.





இதையடுத்து, வத்தளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.





இதேவேளை, ஆற்றில் வீசப்பட்ட சிறுவனைக் கண்டுபிடிக்கப் பொலிஸார் மற்றும் கடற்படை சுழியோடிகள் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.