மாணவனை கடத்தி மொட்டையடித்து தொலைபேசி அபகரிப்பு!
Sri Lanka 1 வருடம் முன்
பாடசாலை மாணவனை கடத்தி தலைமுடியை ஆங்காங்கே வெட்டி அவனது ஸ்மார்ட் கைபேசியை அபகரித்துச் சென்ற குழுவினரை கைது செய்ய அனுராதபுரம் பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அனுராதபுரம் நகரிலுள்ள பாடசாலையொன்றில் பத்தாம் ஆண்டில் கல்வி பயிலும் தஹய்யாகம பிரதேசத்தைச் சேர்ந்த இந்த மாணவன், நண்பர்களுடன் கும்பிச்சன்குளம் நடைபாதையில் சென்று கொண்டிருந்த போது கடத்திச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனது கைபேசியை திருத்துவதற்காக புதிய நகருக்கு வந்து அதைத் திருத்தும் வரை கும்பிச்சன்குளம் வாவிக்கருகேயுள்ள பழச்சாறு விற்பனை செய்யும் இடத்தில் பழச்சாறு பருகிவிட்டு கைபேசியை வாங்கிக்கொண்டு திரும்பிச் செல்லும்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் இந்த சிறுவனை கடத்திச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த மாணவனை மோட்டார் சைக்கிளின் நடுவே ஏற்றிக்கொண்டு மாணவனின் தலைமுடியை ஆங்காங்கே வெட்டியுள்ளனர்.
பின்னர் கைபேசியை பறித்துக்கொண்டு அதிலுள்ள சிம் மற்றும் மெமரி கார்டுகளை கொடுத்து மாணவனை இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து மாணவனது தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
Related Posts