நிர்வாணப் படங்களை அம்பலப்படுத்தபோவதாக மிரட்டி சிறுமிமீது வன்கொடுமை!
Sri Lanka 1 வருடம் முன்
மினுவாங்கொடை பொலிஸ் பிரிவில் வசிக்கும் 15 வயதான சிறுமி ஒருவருடன் 2019 ஆண்டு காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அதே ஆண்டு சிறுமியை ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் ஒருவரை பொலிஸார் தற்போது கைது செய்துள்ளனர்.
இந்நபர் 2019 ஆம் ஆண்டு சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தியபோது எடுத்த நிர்வாண படங்களை பகிரங்க இடங்களில் ஓட்டுவதாக கூறி - மூன்று வருடங்களாக சிறுமியையும் அவரது பெற்றோரையும் அச்சுறுத்தி - மூன்று வருடங்களாக சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திவந்துள்ளார்.
இது தொடர்பில் கொழும்பு சிறுவர் மற்றும் மகளிர் நிவாரண பிரிவுக்கு அறிவித்ததை அடுத்து சந்தேகநபர, 2 கைத்தொலைபேசி களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Related Posts