இராணுவம் எனக்கூறி வீடு புகுந்து கொள்ளை!

Sri Lanka 1 வருடம் முன்

banner

சிலாபம் வீடொன்றில் இராணுவச் சீருடையை ஒத்த ஆடையணிந்த குழுவொன்றினால் பன்னிரண்டு இலட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.





சிலாபம் - ரம்பேபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இக்கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.





பாணந்துறை வலான மோசடி தடுப்புப் பிரிவின் பொலிஸார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு எட்டு பேரை கொண்ட குழுவொன்று இரவு நேரத்தில் வீட்டினுள் நுழைந்துள்ளனர்.





ஒரு கட்டத்தில் தாங்கள் இராணுவத்தினர் என்றும், பிறிதொரு சந்தர்ப்பத்தில் தாங்கள் குற்ற தடுப்பு பிரிவு பொலிஸார் என்றும் தெரிவித்துள்ளனர்.





இதனையடுத்து பன்னிரண்டு இலட்சம் ரூபா மற்றும் பெருந்தொகையான தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு தாங்கள் இராணுவத்தினரோ, பொலிஸாரோ அல்ல என்றும் கொள்ளையிட மட்டுமே வருகை தந்ததாகவும் கூறிவிட்டு தப்பி சென்றுள்ளனர். நகை உரிமையாளர்களினால் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.