பலாக்காய் தலையில் விழுந்ததில் பெண் பலி!

Sri Lanka 1 வருடம் முன்

banner

பலாக்காய் ஒன்று தலையில் விழுந்ததால் 52 வயது பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவமொன்று, கொடக்கவெல பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.





வீட்டில் சமையல் செய்வதற்காக பலாமரத்தில் பலாக்காய் முற்றிய நிலையில், இருக்கின்றதா என பார்ப்பதற்கு இந்தப் பெண் சென்றபோது திடீரென பலாக்காய் ஒன்று தலையில் விழுந்து உள்ளது.





எரிபொருள் இல்லாத காரணத்தால் இந்த பெண்ணை வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு செல்ல வாகனம் கிடைக்கவில்லை.





இந்த நிலையில் பெண்ணை வைத்திய சாலையில் சேர்ப்பதற்கு நீண்ட நேரம் எடுத்து உள்ளது. அதனால் இப்பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





இறக்குவாணை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.