மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த வைத்தியர் கைது!
Sri Lanka 1 வருடம் முன்
அநுராதபுரம் நகரத்தில் தனியார் வைத்திய சிகிச்சை நிலையம் நடத்தி வரும் வைத்தியர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
67 வயதான வைத்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான வைத்தியர் பாடசாலை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் போதை மாத்திரை மற்றும் போதைப் பொருட்களை விற்பனை செய்வதாக வடமத்திய மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்துக்கு பிரதேச வாசிகளிடமிருந்து முறைப்பாடு கிடைத்துள்ளது.
முறைப்பாட்டின்படி மேற்கொண்ட விசாரணை பின்னர் மிகுந்த சிரமத்திற்கும் மத்தியில் சந்தேக நபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணை மேற்கொண்ட பொலிஸார் அநுராதபுரம், தஹய்யாகம சந்தியில் சந்தேக நபர் வைத்தியரின் வாகனத்தை நிறுத்தும்படி சைகை செய்தும் வாகனத்தை நிறுத்தாமல் அவரது வீட்டுக்கு முன்னால் சென்று வாகனத்தை நிறுத்திவிட்டு வாகன கதவுகளை மூடிக் கொண்டு வாகனத்துக்குள்ளேயே இருந்துள்ளார்.
இதையடுத்து அவரது மகனும் மருமகனும் வந்து வாகனத்தின் கதவுகளைத் திறந்த பின்னர் வாகனத்தை சோதனையிட்டபோது அதில் 2 கிராம் 270 மிலி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Related Posts