'காயமுற்ற யானையின் தந்தத்தை கொடூரமாக வெட்டியெடுத்த கொள்ளையர்கள்'
Sri Lanka 1 வருடம் முன்
கெபித்திகொல்லாவ பிரதேசத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வந்த யானையின், இரு தந்தங்களில் ஒன்றை கொள்ளையர்கள் கோடரியால் வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் இரு யானைகள் பயங்கரமாக மோதிக்கொண்டுள்ளன.
இந்த மோதலில் ஒரு யானை காயமுற்றுள்ளது. வனசீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இந்த யானைக்கு உட்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து சிகிச்சையளித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இனம் தெரியாத கொள்ளையர்கள் இந்த யானையின் ஒரு தந்தத்தை கோடரியால் வெட்டி எடுத்துச் சென்றுள்ளதாக வனசீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது இந்த யானை உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.
Related Posts