கோட்டாபய ராஜினாமா செய்ததால் கிணற்றில் குதிக்க முற்பட்ட நபர்
Sri Lanka 1 வருடம் முன்
கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதி பதவியிலிருந்து இராஜினாமா செய்ததை தாங்கிக் கொள்ள முடியாத 66 வயதான நபரொருவர் கிணற்றில் குதிக்க முயற்சித்த சம்பவமொன்று தொம்பே பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
நீண்ட காலமாக ராஜபக்ச குடும்பம் மீது அதீத பற்று கொண்ட இந்த நபர் ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டபாய ராஜபக்ச இராஜினாமா செய்த செய்தியை கேள்விப்பட்டவுடன் கிணற்றில் குதிப்பதற்கு முயற்சித்துள்ளார்.
இருந்தும் அயலவர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டு இந்த நபரை காப்பாற்றியுள்ளனர். இந்த நபரின் புதல்வன் பல நாட்களாக காலி முகத்திடல் போராட்டக் களத்தில் செயல்பாட்டாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
Related Posts