மனைவியுடன் சண்டை - வீட்டிலிருந்த பொருட்களை எரித்துவிட்டு கணவன் தற்கொலை
Sri Lanka 1 வருடம் முன்
அநுராதபுரம் கல்கடவள பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தனது வீட்டிலுள்ள பெறுமதி வாய்ந்த பொருட்கள் சிலவற்றினை எரித்து நாசமாக்கிவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக எலயாபத்துவ பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கடவள மஹிலாமாவத்த பகுதி வீடொன்றில் இச்சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 47 வயதுடய அநுராதபுரம் கல்கடவள பகுதியை வசிப்பிடமாக கொண்ட ஓய்வு பெற்ற கடற்படை சிப்பாய் என்பதும் தெரியவந்துள்ளது.
சம்பவதினத்தன்று இரவு கணவனுக்கும் மனைவிக்குமிடயில் குடும்பப் பிரச்சினை ஏற்பட்டது.
இதன்போது ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் கணவன், தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் எலயாபத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Posts