தேன் எடுக்கச்சென்றவர்களை தாக்கிய காட்டு யானை - ஒருவர் பலி!
Sri Lanka 1 வருடம் முன்
மிஹிந்தலை மகாகனந்தராவ வனப்பகுதியில் தேன் எடுப்பதற்குச் சென்ற இருவரை காட்டு யானை தாக்கியுள்ளது. இதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
படு காயமடைந்த மற்றவர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் பலத்த காயத்திற்குள்ளான நபர், குக்குலாவ சீப்பிக்குளம் பகுதியைச் சேர்ந்தவராவர். மற்றைய நபரும் அதே பகுதியைச் சேர்ந்தவர் எனவும் கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர்.
மகாகனந்தராவ குறுந்தன்குளம் குளத்திற்கு அருகில் தேன் எடுப்பதற்குச்சென்ற போதே இவ்விருவரையும் காட்டு யானை தாக்கியுள்ளது.உயிரிழந்தவரை அவ்விடத்திலே கிடத்திவிட்டு, காயத்திற்குள்ளான நபர் பாரிய சிரமத்திற்கு மத்தியில் காட்டிலிருந்து வெளியாகி பிரதேச வாசிகளிடம் சம்பவத்தை தெரிவித்துள்ளார்.
உடனடியாக செயல்பட்ட பிரதேசவாசிகள் 1990 இலக்கத்துடன் தொடர்பு கொண்டு காயமடைந்த நபரை அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சேர்ந்தனர்.
Related Posts