ஹெரோயினுக்காக தங்கையை விற்ற அக்கா கைது!

Sri Lanka 1 வருடம் முன்

banner

15 வயதான தனது தங்கையை, 15 ஆயிரம் ரூபாவுக்கும் , ஒரு கிராம் ஹெரோயினுக்காகவும், விற்பனை செய்த அக்காவை மினுவாங்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.





சந்தேக நபரான பெண் 26 வயதான ஒரு பிள்ளையின் தாயெனவும், போதைக்கு அடிடையானவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இவரின் தாயும் ஹெரோயின் விற்பனை செய்த குற்றத்திற்காக சிறை சென்றுள்ளார். இதனால் அக்காவும், தங்கையுமே வீட்டில் இருந்துள்ளனர்.





நில்பனாகொட பிரதேசத்திலுள்ள நபரொருவர், ஹெரோயின் விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலை அடுத்து , குறித்த நபரின் வீட்டை சுற்றி வளைத்த பொலிஸார், 5,120 மில்லி கிராம் ஹெரோயினுடன் அவரை கைது செய்துள்ளனர். இதன்போது 15 வயது சிறுமியொருவரும் இருந்துள்ளார். அவர் யாரென பொலிஸார் விசாரித்துள்ளனர்.





சம்பவத்தை விவரித்த பின்னர் ,.சிறுமியை பொலிஸார் பொறுப்பேற்றனர். அவரை விற்பனை செய்த அக்காவையும் கைது செய்தனர்.