கைவிரித்த காதலியை நிர்வாணப்படுத்திய காதலன் கைது!

banner

காதலனை கைவிட்டதால் அதற்குப் பழி தீர்க்கும் முகமாக காதலியின் வீட்டுக்கே சென்று அவரை நிர்வாணப்படுத்தி உடம்பு முழுவதும் மிளகாய் தூளை பூசி கொடுமைப்படுத்தியதாக கூறப்படும் இராணுவ சிப்பாய் ஒருவரையும் அவரது தாய் மற்றும் தாயின் சகோதரிகள் இருவரையும் உஹன பொலிஸார் கைது செய்துள்ளனர்.





பாதிக்கப்பட்ட யுவதி அம்பாறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.





சந்தேக நபரான சிப்பாய் 25 வயதானவர் என்றும் தாய் 52 வயதானவர் என்றும் அவரது சகோதரிகள் இருவரும் 32 மற்றும் 34 வயதானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





இராணுவ சிப்பாய், காலி பிரதேசத்திலுள்ள இராணுவ முகாமொன்றில் கடமையாற்றுவதாகவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.





குறித்த யுவதி 10 மாத காலமாக இந்த இராணுவ சிப்பாய் உடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும், பின்னர் அவரது நடவடிக்கை மோசமாக இருந்ததால் காதல் தொடர்பை நிறுத்தியதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.





இதை பொறுக்க முடியாத சிப்பாய் தாய் மற்றும் அவரது சகோதரிகள் இருவருடன் காதலியின் வீட்டுக்குச் சென்று காதலியை நிர்வாணப்படுத்தி மிளகாய்த்தூளை பூசியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.