5 லட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பெண் கைது!

banner

அநுராதபுரம் பொலிஸார் சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான இரண்டு கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.





கண்டி, ரங்கல பொலிஸ் பிரதேசத்தைச் சேர்ந்த எலுகொல்ல என்ற இடத்தைச் சேர்ந்த 26 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.





கடந்த 4, ஆம் திகதி அனுராதபுரம், விஜயபுர,பாதிய மாவத்தையில் வைத்து 630 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட, அறுராதபுரம் வைத்திய சாலைக்கு அருகே புடவை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த கொட்டாவ பிரதேசத்தில் வசிக்கும் சந்தேக நபர் வழங்கிய தகவலின் பிரகாரமே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.