உக்ரைன் மீது 'மினி'அணு குண்டை புடின் வீசக் கூடும்?
World 1 வருடம் முன்
அடுத்துவரும் நாட்களில் ஓர் அணு ஆயுத மோதல் சாத்தியமா என்பது பற்றிய செய்திகள் சர்வதேச மட்டங்களில் தீவிரமாக அடிபடத்தொடங்கியுள்ளன.
ரஷ்யாவின் அணுகுண்டு வீச்சு எப்படி இருக்கும்? அதன் விளைவுகள் என்ன? பதிலடி எவ்வாறு அமையலாம் என்பனபற்றியெல்லாம் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
உக்ரைனுக்கு அதிர்ச்சியூட்டி அடிபணிய வைத்துச் சரணடையச் செய்வதற்காக- நிபந்தனையற்ற பேச்சுக்கு இணங்கச் செய்வதற்காக அதன் மீது சிறிய - மட்டுப்படுத்தப்பட்ட கதிர்வீச்சுத் தாக்கம் கொண்ட-மினி அணு குண்டுத் தாக்குதலை நடத்த புடின் முனையக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அணு ஆயுதங்களில் மூலோபாய (strategic) அணு குண்டுகள், தந்திரோபாய (tactical) அணு குண்டுகள் என்று இரண்டு வகைகள் உள்ளன. முதலாவது பரந்த அளவில் மனிதப் பேரழிவை ஏற்படுத்திப் போரை முடிவுக்குக் கொண்டுவந்து வெற்றியைப் பிரகடனம் செய்வதை நோக்காகக் கொண்டு வீசப்படுவது.
1945 இல் ஹிரோஷீமா-நாகசாகி (Hiroshima and Nagasaki) நகரங்கள் மீது அமெரிக்கா வீசிய இரண்டு குண்டுகள் மூலோபாய வகையைச் சேர்ந்தவை. இரண்டாவது "தந்திரோபாய" அணு குண்டுகள் எனப்படுபவை போர்க் களத்தில் எதிரிக்கு ஒரு பகுதி அளவு சேதங்களையும் அதேசமயம் பாரிய உளவியல் தாக்கத்தையும் உருவாக்கும் நோக்கோடு வீசப்படக் கூடிய சிறிய மினி குண்டுகள். படை நிலைகள், பதுங்குகுழிகள், முகாம்கள் மீதோ அல்லது தலைநகர் கீவ் மீதோ வீசப்படலாம். அல்லது சிவிலியன் இழப்புகள் ஏற்படாத விதமாக நீர் நிலைகள் மீது வீசப்பட்டுப் பெரும் உளவியல் பீதியை ஏற்படுத்தலாம்.
உக்ரைன் வான் பரப்பில் இத்தகைய அணு குண்டுகளை வெடிக்கச் செய்வதன் மூலம் அங்குள்ள இலத்திரனியல் கருவிகளின் செயற்பாட்டையும் முடக்க முடியும்.
சாதாரண ஏவுகணைகள் மற்றும் ஆட்டிலறிகளில் பொருத்தி ஏவக்கூடிய தந்திரோபாய அணு ஆயுதங்களை உலகில் அதிகமாக வைத்திருக்கின்ற ஒரே நாடு ரஷ்யா. சமீப கால ராணுவப் புலனாய்வுத் தகவல்களின் படி ரஷ்யா வசம் குறைந்தது இரண்டாயிரம் தந்திரோபாய அணு ஆயுதங்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
உக்ரைனை அடிபணியச் செய்வதற்காகவும் அதேசமயம் எதிர்த் தாக்குதல் தொடர்பாக நேட்டோ நாடுகள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தவும் ஒரு தந்திரோபாய (tactical) அணு ஆயுதத்தைப் புடின் பயன்படுத்தக் கூடும் என்பதே நிபுணர்கள் பலரது
கணிப்பாக உள்ளது.
அவ்வாறான ஒரு தாக்குதல் நடத்தப்படுகின்ற பட்சத்தில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோவின் பதிலடி எவ்வாறு அமையும்?
எந்த வகையான அணு ஆயுதத் தாக்குதலும் பேரழிவையும் அதிர்ச்சியூட்டும் பதில் நடவடிக்கைகளையும் கொண்டிருக்கும் என்று அமெரிக்கா மொஸ்கோவை எச்சரித்துள்ளது. ரஷ்யாவின் அணு ஆயுதத் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் "ஒரு திட்டத்தை அமெரிக்கா வைத்திருக்கிறது" - என்று ராஜாங்கச் செயலர் அன்டனி பிளிங்கன் கூறியிருக்கிறார். அது என்ன என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.
அமெரிக்கா அதன் நூற்றுக்கு மேற்பட்ட தந்திரோபாய அணு ஆயுதங்களை (tactical nuclear weapons) நேட்டோவின் ஐரோப்பியக் கூட்டணி நாடுகளில் நிறுத்தியிருக்கிறது. ஆனால் ரஷ்யாவுக்குப் பதிலடியாக ஓர் அணு ஆயுதத் தாக்குதலைத் தெரிவு செய்வது அமெரிக்காவுக்கு மிகச் சிக்கலானது.வோஷிங்டன் தனித்து எடுக்கக் கூடிய முடிவாக அது இருக்காது. நேட்டோ நாடுகள் அனைத்தும் ஒருமித்து எடுக்க வேண்டிய பதிலடியாகவே அது அமைய முடியும். அதில் முரண்பாடுகள் எழலாம்.
நேட்டோ அதன் அணு ஆயுதங்களை உக்ரைன் படைகளுக்கு வழங்கி அதன் வழி ரஷ்யா மீது தாக்குவதே சிறந்த உத்தியாக இருக்க முடியும் என்பதை நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
தந்திரோபாய அணு ஆயுதங்கள் மூலம் ரஷ்யாவின் நிலப்பரப்பினுள் உக்ரைன் தாக்குமானால் மொஸ்கோ முழு அளவிலான அணு ஆயுதப் போரில் இறங்குகின்ற ஆபத்தும் உள்ளது. அண்டை நாடுகள் பலவும் கூட அணுக்கதிர் வீச்சு அழிவுகளைச் சந்திக்க நேரிடும். உக்ரைன் மீது ரஷ்யா அதன் முதலாவது அணு ஆயுதத் தாக்குதலை நடத்தும் பட்சத்தில் புடின் மீதான உலகளாவிய எதிர்ப்பு வலுவடையும்.
போரில் நடுநிலைப் போக்கை வகிக்கின்ற இந்தியாவும் சீனாவும் அவருக்கு எதிரான அணியின் பக்கம் நிற்க நேரிடும். சீனாவின் ஆதரவை இழப்பது புடினை மேலும் தனிமைப்படுத்தி விரக்திக்குள் தள்ளலாம். அதனால் தனித்துப் போன சூழ்நிலையில் அவர் எடுக்கக் கூடிய ஆபத்தான முடிவுகள் ஐரோப்பாவை மட்டுமன்றி முழு உலகையுமே அழிவுக்குள் தள்ளிவிடலாம்.
உக்ரைன் பிராந்தியங்களை சர்வதேச சட்டங்களை மீறிக் கேலிக் கூத்தான வாக்கெடுப்புகள் மூலம் ரஷ்யாவோடு இணைப்பதை அனுமதிப்பது தற்போதைய உலக ஒழுங்கைச் சீரழித்து நாடுகள் நாடுகளை ஆக்கிரமிக்க எத்தனிக்கின்ற குழப்பமான உலகை உருவாக்க உந்துதலாக மாறிவிடும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது.
புடினின் சர்வாதிகாரத்தனமான அந்த ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தும் அதேசமயம், சர்வதேச அரங்கில் அவர் மேலும் தனிமைப்படுத்தப்பட்டு மூலையில் முடக்கப்படுவதால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் அமெரிக்கா அச்சம் கொண்டுள்ளது. வெளியுலகிலும் உள்நாட்டிலும் தோல்வியைச் சந்திக்க நேரும் பட்சத்தில் புடின் சிவப்பு அணு ஆயுதப் பொத்தான்களை அழுத்தாமல் விடப்போவதில்லை என்பதை அவருக்கு நெருக்கமானவர்கள் குறிப்பிடுகின்றனர். வாக்கெடுப்புக்குப் பின்னர் மொஸ்கோவுடன் இணைக்கப்படவுள்ள தனது நான்கு பிராந்தியங்கள் மீதும் தாக்குதல் தொடுப்பதில் உக்ரைனுக்குப் பல சிக்கல்கள் உள்ளன. அவற்றின் மீதான தாக்குதல் ரஷ்யாவின் இறையாண்மை மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்று மொஸ்கோ எச்சரித்துள்ளது.
இத்தகைய அபாயங்களுடனான பின்னணியில்
உக்ரைன் போர் ஒரு முக்கியமான - ஆபத்தான - கட்டத்தை நெருங்குகிறது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கை வகுப்பாளர்களில் ஒருவர்
கூறியிருக்கிறார். புடின் ஆகப் பிந்தி வெளியிட்ட அணு ஆயுதத் தாக்குதல் எச்சரிக்கை அவரே கூறியது போன்று "முட்டாள்தனமான போலிப் பேச்சு அல்ல" என்பதை அமெரிக்காவும் ஐரோப்பிய வல்லரசுகளும் உணரத்தொடங்கியுள்ளன.
ரஷ்யாவின் அணுகுண்டு வீச்சு எப்படி இருக்கும்? அதன் விளைவுகள் என்ன? பதிலடி எவ்வாறு அமையலாம் என்பனபற்றியெல்லாம் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
உக்ரைனுக்கு அதிர்ச்சியூட்டி அடிபணிய வைத்துச் சரணடையச் செய்வதற்காக- நிபந்தனையற்ற பேச்சுக்கு இணங்கச் செய்வதற்காக அதன் மீது சிறிய - மட்டுப்படுத்தப்பட்ட கதிர்வீச்சுத் தாக்கம் கொண்ட-மினி அணு குண்டுத் தாக்குதலை நடத்த புடின் முனையக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அணு ஆயுதங்களில் மூலோபாய (strategic) அணு குண்டுகள், தந்திரோபாய (tactical) அணு குண்டுகள் என்று இரண்டு வகைகள் உள்ளன. முதலாவது பரந்த அளவில் மனிதப் பேரழிவை ஏற்படுத்திப் போரை முடிவுக்குக் கொண்டுவந்து வெற்றியைப் பிரகடனம் செய்வதை நோக்காகக் கொண்டு வீசப்படுவது.
1945 இல் ஹிரோஷீமா-நாகசாகி (Hiroshima and Nagasaki) நகரங்கள் மீது அமெரிக்கா வீசிய இரண்டு குண்டுகள் மூலோபாய வகையைச் சேர்ந்தவை. இரண்டாவது "தந்திரோபாய" அணு குண்டுகள் எனப்படுபவை போர்க் களத்தில் எதிரிக்கு ஒரு பகுதி அளவு சேதங்களையும் அதேசமயம் பாரிய உளவியல் தாக்கத்தையும் உருவாக்கும் நோக்கோடு வீசப்படக் கூடிய சிறிய மினி குண்டுகள். படை நிலைகள், பதுங்குகுழிகள், முகாம்கள் மீதோ அல்லது தலைநகர் கீவ் மீதோ வீசப்படலாம். அல்லது சிவிலியன் இழப்புகள் ஏற்படாத விதமாக நீர் நிலைகள் மீது வீசப்பட்டுப் பெரும் உளவியல் பீதியை ஏற்படுத்தலாம்.
உக்ரைன் வான் பரப்பில் இத்தகைய அணு குண்டுகளை வெடிக்கச் செய்வதன் மூலம் அங்குள்ள இலத்திரனியல் கருவிகளின் செயற்பாட்டையும் முடக்க முடியும்.
சாதாரண ஏவுகணைகள் மற்றும் ஆட்டிலறிகளில் பொருத்தி ஏவக்கூடிய தந்திரோபாய அணு ஆயுதங்களை உலகில் அதிகமாக வைத்திருக்கின்ற ஒரே நாடு ரஷ்யா. சமீப கால ராணுவப் புலனாய்வுத் தகவல்களின் படி ரஷ்யா வசம் குறைந்தது இரண்டாயிரம் தந்திரோபாய அணு ஆயுதங்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
உக்ரைனை அடிபணியச் செய்வதற்காகவும் அதேசமயம் எதிர்த் தாக்குதல் தொடர்பாக நேட்டோ நாடுகள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தவும் ஒரு தந்திரோபாய (tactical) அணு ஆயுதத்தைப் புடின் பயன்படுத்தக் கூடும் என்பதே நிபுணர்கள் பலரது
கணிப்பாக உள்ளது.
அவ்வாறான ஒரு தாக்குதல் நடத்தப்படுகின்ற பட்சத்தில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோவின் பதிலடி எவ்வாறு அமையும்?
எந்த வகையான அணு ஆயுதத் தாக்குதலும் பேரழிவையும் அதிர்ச்சியூட்டும் பதில் நடவடிக்கைகளையும் கொண்டிருக்கும் என்று அமெரிக்கா மொஸ்கோவை எச்சரித்துள்ளது. ரஷ்யாவின் அணு ஆயுதத் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் "ஒரு திட்டத்தை அமெரிக்கா வைத்திருக்கிறது" - என்று ராஜாங்கச் செயலர் அன்டனி பிளிங்கன் கூறியிருக்கிறார். அது என்ன என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.
அமெரிக்கா அதன் நூற்றுக்கு மேற்பட்ட தந்திரோபாய அணு ஆயுதங்களை (tactical nuclear weapons) நேட்டோவின் ஐரோப்பியக் கூட்டணி நாடுகளில் நிறுத்தியிருக்கிறது. ஆனால் ரஷ்யாவுக்குப் பதிலடியாக ஓர் அணு ஆயுதத் தாக்குதலைத் தெரிவு செய்வது அமெரிக்காவுக்கு மிகச் சிக்கலானது.வோஷிங்டன் தனித்து எடுக்கக் கூடிய முடிவாக அது இருக்காது. நேட்டோ நாடுகள் அனைத்தும் ஒருமித்து எடுக்க வேண்டிய பதிலடியாகவே அது அமைய முடியும். அதில் முரண்பாடுகள் எழலாம்.
நேட்டோ அதன் அணு ஆயுதங்களை உக்ரைன் படைகளுக்கு வழங்கி அதன் வழி ரஷ்யா மீது தாக்குவதே சிறந்த உத்தியாக இருக்க முடியும் என்பதை நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
தந்திரோபாய அணு ஆயுதங்கள் மூலம் ரஷ்யாவின் நிலப்பரப்பினுள் உக்ரைன் தாக்குமானால் மொஸ்கோ முழு அளவிலான அணு ஆயுதப் போரில் இறங்குகின்ற ஆபத்தும் உள்ளது. அண்டை நாடுகள் பலவும் கூட அணுக்கதிர் வீச்சு அழிவுகளைச் சந்திக்க நேரிடும். உக்ரைன் மீது ரஷ்யா அதன் முதலாவது அணு ஆயுதத் தாக்குதலை நடத்தும் பட்சத்தில் புடின் மீதான உலகளாவிய எதிர்ப்பு வலுவடையும்.
போரில் நடுநிலைப் போக்கை வகிக்கின்ற இந்தியாவும் சீனாவும் அவருக்கு எதிரான அணியின் பக்கம் நிற்க நேரிடும். சீனாவின் ஆதரவை இழப்பது புடினை மேலும் தனிமைப்படுத்தி விரக்திக்குள் தள்ளலாம். அதனால் தனித்துப் போன சூழ்நிலையில் அவர் எடுக்கக் கூடிய ஆபத்தான முடிவுகள் ஐரோப்பாவை மட்டுமன்றி முழு உலகையுமே அழிவுக்குள் தள்ளிவிடலாம்.
உக்ரைன் பிராந்தியங்களை சர்வதேச சட்டங்களை மீறிக் கேலிக் கூத்தான வாக்கெடுப்புகள் மூலம் ரஷ்யாவோடு இணைப்பதை அனுமதிப்பது தற்போதைய உலக ஒழுங்கைச் சீரழித்து நாடுகள் நாடுகளை ஆக்கிரமிக்க எத்தனிக்கின்ற குழப்பமான உலகை உருவாக்க உந்துதலாக மாறிவிடும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது.
புடினின் சர்வாதிகாரத்தனமான அந்த ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தும் அதேசமயம், சர்வதேச அரங்கில் அவர் மேலும் தனிமைப்படுத்தப்பட்டு மூலையில் முடக்கப்படுவதால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் அமெரிக்கா அச்சம் கொண்டுள்ளது. வெளியுலகிலும் உள்நாட்டிலும் தோல்வியைச் சந்திக்க நேரும் பட்சத்தில் புடின் சிவப்பு அணு ஆயுதப் பொத்தான்களை அழுத்தாமல் விடப்போவதில்லை என்பதை அவருக்கு நெருக்கமானவர்கள் குறிப்பிடுகின்றனர். வாக்கெடுப்புக்குப் பின்னர் மொஸ்கோவுடன் இணைக்கப்படவுள்ள தனது நான்கு பிராந்தியங்கள் மீதும் தாக்குதல் தொடுப்பதில் உக்ரைனுக்குப் பல சிக்கல்கள் உள்ளன. அவற்றின் மீதான தாக்குதல் ரஷ்யாவின் இறையாண்மை மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்று மொஸ்கோ எச்சரித்துள்ளது.
இத்தகைய அபாயங்களுடனான பின்னணியில்
உக்ரைன் போர் ஒரு முக்கியமான - ஆபத்தான - கட்டத்தை நெருங்குகிறது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கை வகுப்பாளர்களில் ஒருவர்
கூறியிருக்கிறார். புடின் ஆகப் பிந்தி வெளியிட்ட அணு ஆயுதத் தாக்குதல் எச்சரிக்கை அவரே கூறியது போன்று "முட்டாள்தனமான போலிப் பேச்சு அல்ல" என்பதை அமெரிக்காவும் ஐரோப்பிய வல்லரசுகளும் உணரத்தொடங்கியுள்ளன.
-பாரிஸிலிருந்து குமாரதாஸன்-
Related Posts