17 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் நால்வர் கைது!

banner

17 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்த மூவரிடமிருந்து 7 கிலோ 500 கிராம் எடையுடைய 16 கோடி ரூபா பெறுமதியான தங்கம் மீட்கப்பட்டது.


சூட்சமமான முறையில் தங்கள் பயணப்பையில் தங்கத்தை மறைத்துக் கொண்டு வந்த நிலையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் உள்ளடங்குகின்றார்.




அத்துடன் குறித்த விமானத்திலேயே இலங்கைக்கு வருகை தந்த நபர் ஒருவர் ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்..




கைது செய்யப்பட்டவர்களைக் கட்டுநாயக்கப் பொலிஸாரிடம் ஒப்படைக்கச் சுங்க அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.