இலங்கையில் கடல் பாதுகாப்பை அதிகரிக்க ஆஸி. முதலீடு!

Sri Lanka 1 வருடம் முன்

banner
இலங்கை கடல் எல்லையில், கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்காக, கடல்சார் எதிர்வுகூறல் கட்டமைப்பை அமைக்க 05 இலட்சம் ஆஸ்திரேலிய டொலர் பெறுமதியான முதலீடுகளை ஆஸ்திரேலியா செய்துள்ளது.

மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் தலைமையில், நாட்டின் சில நிறுவனங்களுடன் இணைந்து, இந்த கடல்சார் எதிர்வுகூறல் கட்டமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மீன்பிடி, கடல் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட சமுத்திரவியல் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தின் பிரதிபலிப்பாக இத் திட்டம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.