யாழுக்கு ஹெரோயின் கொண்டுவரும் பிரதான சூத்திரதாரி கைது!

banner
உயிர்கொல்லி ஹெரோயின் போதைப்பொருளை யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரும் பிரதான வியாபாரி ஒருவரை சந்தேகத்தில் யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ். பொம்மைவெளிப் பகுதியைச் சேர்ந்த 52 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு உயிர் கொல்லி போதைப்பொருளான ஹெரோய்ன் எடுத்து வருகின்றார் என்று பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.