நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் பலி!
Sri Lanka 1 வருடம் முன்
மட்டக்களப்பு, உன்னிச்சை குளத்தில் நீராடச் சென்ற இளைஞர்கள் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை நண்பர்களுடன் நீராடச் சென்ற வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த விஷ்ணுகாந் விதுஷனன் (வயது 16) மற்றும் மனோகரன் கண்ணதாசன் (வயது 33) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இதன்போது விஷ்ணுகாந் விதுஷனன் நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மற்றையவர் இன்று பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று மாலை நண்பர்களுடன் நீராடச் சென்ற வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த விஷ்ணுகாந் விதுஷனன் (வயது 16) மற்றும் மனோகரன் கண்ணதாசன் (வயது 33) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இதன்போது விஷ்ணுகாந் விதுஷனன் நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மற்றையவர் இன்று பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Posts