காணாமல்போன மோட்டார் சைக்கிளுடன் கான்ஸ்டபிள் கைது!

banner
மஹரகம நகரில் காணாமற்போன மோட்டார் சைக்கிளை பாவித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக கொஹுவல பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் மஹரகம சூப்பர் மார்க்கெட்டுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று காணாமற்போனதாகவும் அது குறித்து மஹரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இத் திருட்டு சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டிருக்கும் போது நபரொருவர் தனது மோட்டார் சைக்கிளை செலுத்திச் செல்வதாக முறைப்பாட்டாளர் மஹரகம பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதை அடுத்து பொலிஸார் மோட்டார் சைக்கிளுடன் கான்ஸ்டபிளை கைது செய்துள்ளனர்.