பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது!

Sri Lanka 1 வருடம் முன்

banner
பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35 மற்றும் 38 வயதுடைய வெயாங்கொடை மற்றும் திவுலபிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இருவரும் மாளிகாவத்தை, கடவத்தை, தெமட்டகொட, கலேவெல மற்றும் குருநாகல் பிரதேசங்களில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைதாகும்போது இருவரிடமும் ஹெரோயின் போதைப்பொருள் இருந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெயாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.