குருணாகலையில் பிரபல பாடசாலையில் மாயமாகும் உணவுப் பொதிகள்!

Sri Lanka 1 வருடம் முன்

banner
குருணாகலையில் பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் சில மாணவர்கள், ஏனைய மாணவர்களின் உணவுப் பொதிகளை களவாடி சாப்பிடுவதன் காரணமாக அப் பாடலையில் தற்போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கடந்த சில வாரங்களாக இவ்வாறு மாணவர்களது
புத்தக பையிலுள்ள உணவுப் பொதி திருடப்படுவதாகவும் , இதன் காரணமாக பல ஆசிரியர்கள் தமது வகுப்பு மாணவர்கள் எடுத்து வரும் உணவுப் பொதிகளை பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள மிகமோசமான பொருளாதார சீரழிவு காரணமாக இவ் விடயம் . மோசமான மனிதாபிமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என அப் பாடசாலை ஆசிரியரொருவர் கூறியுள்ளார்.