புதையல் தோண்டிய இராணுவ அதிகாரி உள்ளட்ட குழுவுக்கு மறியல்!

Sri Lanka 1 வருடம் முன்

banner
மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கடவல அரச வனப்பகுதியில் புதையல் தோண்டிய இராணுவ கோப்ரல் உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஜசிங்கபுர பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் கடமையாற்றும் 35 வயதுடைய கோப்ரல் ஒருவரும் வஹமல்கொல்லாவ, புளியங்குளம், அழுத்கம, தர்கா நகர் மற்றும் பதவிய பராக்கிரமபுர பகுதிகளைச் சேர்ந்த 25,30,35, 45 மற்றும் 56 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களாவர்.

சந்தேக நபர்கள் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட மின் பிரப்பாக்கி, பல அலவாங்குகள் மற்றும் மண் வெட்டி உள்ளிட்ட பொருட்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 14 ம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பட்டுள்ளனர்.