மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த சிகையலங்கார நிலைய உரிமையாளர் கைது!

Sri Lanka 1 வருடம் முன்

banner
புகைப்பதற்காக கஞ்சா வைத்திருந்த நான்கு மாணவர்களையும், கஞ்சா விற்பனை செய்த நபரையும் நிவித்திகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாணவர்கள் சிலர் கஞ்சா புகைப்பதற்கு தயாராவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது கஞ்சா விற்பனை செய்த நபரை சலூனில் வைத்து கைது செய்துள்ளனர். அவர் சிகையலங்கார தொழிலில் ஈடுபடுபவர்.