இலங்கையில் தலைதூக்கும் கொரோனா - நாடாளுமன்றில் அவசர விவாதம்

banner

இலங்கையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், வைரஸ் தாக்கம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நாளை 23 விவாதம் நடைபெறவுள்ளது.





சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.





தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமையவே ஒரு நாள் விவாதம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி முற்பகல் 10 மணி முதல் மாலைவரை விவாதம் நடைபெறும்.





நாட்டின் தற்போதைய மற்றும் அடுத்தக்கட்ட சுகதார நகர்வுகள் தொடர்பில் இதன்போது சுகாதார அமைச்சர் விளக்கமளிக்கவுள்ளார்.