நாடாளுமன்றம் வருகிறார் பஸில் - பதவி துறக்கிறார் ஜயந்த கெட்டகொட

banner

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் நடைமுறைக்குவந்த பின்னர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வரவுள்ளார் எனவும், அவருக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது.





பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்காக மொட்டு கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் ஜயந்த கெட்டகொட எம்.பி. பதவியை துறக்கவுள்ளார் என மொட்டு கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.





அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் இரட்டை பிரஜாவுரிமைகொண்ட நபரொருவர் தேர்தலில் போட்டியிடமுடியாது. இதனால் எம்.பி. பதவியை வகித்த கீதா குமாசிங்கவுக்கு கடந்தமுறை பதவியை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.





இந்நிலையில் இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கான தடை '20' ஊடாக நீக்கப்பட்டுள்ளது. எனவே, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட '20' இல் சபாநாயகர் கையொப்பமிட்ட பின்னர் அது நடைமுறைக்கு
அதன்பின்னரே பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவார் எனவும், அவருக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பதவி வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.