இலங்கையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்

Politics 3 ஆண்டுகள் முன்

banner

நாட்டில் மேலும் 5 பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.





இதன்படி கொழும்பு மாவட்டத்தில் தெமட்டகொடை, மருதானை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை ஊரடங்கு அமுலில் இருக்கும்.





அத்துடன், களுத்துறை மாவட்டத்தில் பயாகல, பேருவளை, அளுத்கம ஆகிய பொலிஸ் பிரிவுகளில் எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 5 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.