'கிழ்கில் தமிழ் எல்லைக் கிராமங்கள் சோமாலியாபோல் காட்சியளிப்பு'

banner

" தமிழ் தலைமைகள் கடந்த காலங்களில் கிழக்கில் தமிழ் மக்களின் வாக்குகளை சூறையாடி போக்கணம் கெட்ட அரசியலை செய்து தமிழ் மக்களின் இருப்பை அழித்து வந்துள்ளது. ஆனால் கடந்த மூன்று தசாப்த காலமாக முஸ்லிம் தலைமைகளை பொறுத்த வரையில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் அரசுடன் இணைந்து தங்களது பகுதிகளை சவூதி, துபாய் போன்று அபிவிருத்தி செய்திருக்கின்றனர். ஆனால் நமது தமிழ் எல்லைக் கிராமங்கள் இன்றும் சோமாலியா போன்று காட்சி அளிக்கின்றது."





இவ்வாறு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வெல்லாவெளியில் பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் விஷேட நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.





" கிழக்கில் அடுத்த தலைமுறைக்கு ஒரு நல்ல எதிர் எதிர்காலத்தை உருவாக்க உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை நாம் செய்து வருகின்றோம். இதற்காக கிழக்கில் வலிமை மிகுந்த அரசியல் கட்டமைப்பை உருவாக்கி வருகின்றோம். இந்த கட்டமைப்பில் அனைவரும் இணைந்து நமது எதிர்காலத்தை நலம் பெறச் செய்யுமாறு வேண்டுகிறோம்." எனவும் குறிப்பிட்டார்.