'முஸ்லிம் எம்.பிக்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டால் எதிர்ப்பேன்'

banner

ஹக்கீம், ரிஷாட் ஆகியோரின் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டால் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிடுவோம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.





ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் உதவி தேவையில்லை என நீங்கள் அறிவித்துவந்த நிலையில் 20 இற்கு ஏன் ஆதரவு பெற்றப்பட்டது என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே விமல் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.





"சுயமாக முன்வந்து எவராவது வாக்களிப்பார்களால் அதனை எம்மால் தடுக்கமுடியாது, அது அவர்களின் உரிமை. அதற்காக அரசாங்கத்துடன் உறவுகொள்ளமுடியாது, அவர்களுக்கு பதவி வழங்கப்பட்டால் கடுமையாக எதிர்ப்போம். " என்றும் விமல்வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.