'எழு பேருக்கும் விரைவில் விடுதலை' - தமிழக அமைச்சர் நம்பிக்கை

banner

"காலதாமதமின்றி ஏழு பேரும் விடுதலையாக வாய்ப்பு உள்ளது." என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.





" இது விடயம் தொடர்பில் ஆளுநர் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார்." எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.





தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஏழு பேர் விடுதலை தொடர்பாக மூத்த மத்திய அமைச்சர்களுடன் கலந்தாலோசித்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ள சூழலில், தமிழக சட்டத்துறை அமைச்சர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.