பிள்ளையான் பிணையில் விடுதலை!

Politics 3 ஆண்டுகள் முன்

banner

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று (24) பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.





2015 ஆம் ஆண்டுமுதல் சிறைதண்டனை அனுபவித்துவரும் பிள்ளையான், சிறைச்சாலையில் இருந்தே தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.





தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில், சிவநேசத்துரை சந்திரகாந்தன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.