நாமல் குமார போட்ட 'கருணா குண்டால்' தெற்கு அரசியலில் பரபரப்பு!

Politics 3 ஆண்டுகள் முன்

banner

கருணா அம்மான் தொடர்பில் நாமல் குமார வெளியிட்டுள்ள கருத்தானது தெற்கு அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுததியுள்ளது.





நாட்டிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல்கள்மீது தாக்குதல் நடத்துவதற்கு கருணா அம்மான் 15 கோடி ரூபா கோரினார். பிக்கு ஒருவரே பேரம் பேசினார். பொறுப்புடனேயே இந்த தகவலை வெளியிடுகின்றேன். இது தொடர்பான குரல் பதிவுகளும் என்னிடம் உள்ளன. என்று நாமல் குமார தகவல் வெளியிட்டுள்ளார்.





இந்நிலையில் கருணா அம்மான் தொடர்பில் நாமல் குமார வெளியிட்டுள்ள தகவல்கள் சம்பந்தமாக உடனடியாக விசாரணை ஆரம்பிக்கப்படவேண்டும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தியுள்ளார்.





பிரான்ஸில் இருக்கும் துஷார பீரிஸ் என்பவரின் திட்டம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். எனவே, துஷார பீரிஸை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.