'ஐ.நா. செயலருடன் ஒப்பந்தம் கைச்சாத்திடவில்லை'
Politics 3 ஆண்டுகள் முன்
போர் முடிவடைந்த பின்னர் ஐ.நாவின் செயலாளர் நாயகத்துடன் எந்தவொரு ஒப்பந்தமும் செய்துகொள்ளப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிவடைந்த பின்னர் ஐ.நா. செயலாளராக இருந்த பான்கீ மூன் இலங்கை வந்தார். அவரும் அப்போதைய ஜனாதிபதியும் இணைந்து ஊடகங்களுக்கு கூட்டறிக்கையொன்றை வெளியிட்டனர். ஆனால் எந்தவொரு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படவில்லை.
கடந்த ஆட்சியின்போதுதான் இராணுவத்தையும் நாட்டையும் காட்டிக்கொடுக்கும் விதத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கப்பட்டது. அந்த இணை அனுசரணையில் இருந்து நாம் தற்போது விலகியுள்ளோம். அனைத்து நாடுகளுடனும் நட்புறவை பேணுகின்றோம். அணிசேரா - நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கையே எமது கொள்கையாகும்." - என்றார்.
Related Posts