புதிய கட்சி ஆரம்பித்தார் சந்திரசேகரனின் மகள்

Politics 3 ஆண்டுகள் முன்

banner

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர். சந்திரசேகரனின் புதல்வி சட்டத்தரணி அனுசா சந்திரசேகரன் தலைமையில் ‘சந்திரசேகரன் மக்கள் முன்னணி’ என்ற பெயரில் புதியதொரு அரசியல் கட்சி உதயமாகியுள்ளது.





அத்துடன், ‘அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணி’ எனும் தொழிற்சங்க பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விரு அமைப்புகளினதும் பொதுச்செயலாளராக அனுசா சந்திரசேகரன் செயற்படுவார். ஏனைய உறுப்பினர்கள் விபரம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.





மலையக மக்கள் முன்னணியின் பிரதி பொதுச்செயலாளராக செயற்பட்ட அனுசா சந்திரசேகரன், நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தனித்து களமிறங்கி 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றார்.





எனினும், அவரை கட்சியில் இருந்து இடைநிறுத்தும் முடிவை மலையக மக்கள் முன்னணி எடுத்தது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே புதிய கட்சியை அனுசா ஆரம்பித்துள்ளார்.