ஆளுங்கட்சி தமிழ் எம்.பிக்களுக்கு ஆப்பு வைத்த கம்மன்பில
Politics 3 ஆண்டுகள் முன்
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறுகோரி நீதி அமைச்சரிடம் ஆளுங்கட்சி பக்கமுள்ள தமிழ் எம்.பிக்கள் மகஜரொன்றை கையளித்துள்ள நிலையில், தமிழ் அரசியல் கைதிகள் என்று நாட்டில் எவரும் இல்லை என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பால் தமிழ் எம்.பிக்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளவை வருமாறு,
" இலங்கையில், எந்தவோர் அரசியல் கைதியும் சிறையில் தடுத்து வைக்கப்படவில்லை. தன்னுடைய அரசியல் சித்தாந்தங்களை அடிப்படையாக கொண்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்தால், அவ்வாறானவர்களே 'அரசியல் கைதி' எனப்படுபவர். ஆனால், இலங்கையில் கருத்து வெளியிடும் சுதந்திரம் அரசியலமைப்பின், அடிப்படை உரிமைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது.ஏதாவதொரு எண்ணத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக எந்தவொரு நபரும் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்படவில்லை.
பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டமையாலேயே நீங்கள், கூற நினைப்பவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கலாம். ( நான் நினைக்கிறேன் நீங்கள் கூறுவது அவர்களாக இருக்கலாம்.) இலங்கையில் எந்தவொரு அரசியல் கைதியும் இல்லை என்பதால், அரசியல் கைதிகளை விடுப்பது தொடர்பான எந்தவொரு விடயமும் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.
இலங்கையில் உள்ள கைதிகள், அவர்களால் செய்யப்பட்ட குற்றங்களின் கீழ் மாத்திரமே வகைப்படுத்தப்படுவர். அதனைத்தவிர, எந்தவொரு கைதியும் இனம், மொழி ரீதியாக வகைப்படுத்தப்படுவதில்லை." என்றார்.
அதேவேளை, கைதிகளின் நன்னடத்தை தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்தால், 4 வருடங்களுக்கு ஒரு தடவை, முன்வைக்கப்படும் பரிந்துரைகளை ஆராய்ந்து, கைதிகளின் தண்டனை காலத்தை அல்லது தண்டனைகள் குறைக்கப்படும். இந்தக் கொள்கையானது கடந்த காலங்களில் நிறுத்தப்பட்டிருந்தது எனவும் கூறினார்.
Related Posts