பிள்ளையான், வியாழேந்திரன்மீது ஜனா விமர்சனக் கணை தொடுப்பு
Politics 3 ஆண்டுகள் முன்
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகள் தொடர்பான கலந்துரையாடல்கள், திட்டமிடல்கள் எப்போதும் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்ததாக அமைந்திருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா), அதனைவிடுத்து ஒருதலைப்பட்சமான முடிவெடுப்புகளாக, நிகழ்ச்சி நிரல்களாக நடைபெறுவது கண்டிக்கத்தக்கதும் மாற்றியமைக்கப்பட வேண்டியதும் எனத் தெரிவித்துள்ளார்.
" மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அண்மைய நாட்களில் விவசாயம், கல்வி, பொருளாதார விடயங்கள் தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் சில கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன. இவை முறைப்படியானதாக நடைபெற்றிருக்கவில்லை. இது நடைமுறைகளை மீறும் செயலாகவே எம்மால் பார்க்கப்படுகிறது. அதேபோன்றே, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனும் மாவட்டம் சார்ந்த விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல்களை தனிப்பட்ட முறையில் மாவட்டச் செயலகத்தில் நடத்துவது தவறானதாகும்." என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
Related Posts