அமெரிக்க தூதுவருடன், தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு
Politics 3 ஆண்டுகள் முன்
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ்க்கும் , இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்குமிடையில் இன்று காலை 7.00 மணியளவில் தனியார் விடுதி ஒன்றில் சந்திப்பு நடைபெற்றது.அக்கட்சியின் சார்பில் மாவை சேனாதிராஜா ,சிறிதரன், சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட சிறிதரன் எம்.பி.,
" ஜெனிவாவில் கொண்டுவரப்பட இருக்கின்ற தீர்மானம் தொடர்பில் மற்றும் அந்த தீர்மானத்திற்கு இருக்கின்ற சவால்கள் அந்த சாவல்களை எதிர்கொள்வதற்காக ஒருங்கிணைந்த நாடுகள் எவ்வாறான விடயங்களை எதிர்கொள்கின்றன, அந்த சாவால்களை அவர்கள் எவ்வாறு சாமாளிக்க போகிறார்கள், அதற்கு தமிழர்தரப்பான எங்களுடைய பங்களிப்பு என்ன மற்றும் ஏனைய நாடுகளுடன் கலந்துரையாட வேண்டிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
மேலும் இன்று உள்ள களசூழல்கள் தமிழ் மக்கள் எவ்வாறான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் மற்றும் இந்த அரசாங்கம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டம் நடந்து முடிந்த பின்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,தவிசாளர்கள், பொதுமக்கள் போன்றோரை விசாரணை என்ற போர்வயில் அச்சுறுத்தி வருவதையும் நாங்கள் அவருடன் கலந்துரையாடியுள்ளோம்.
அத்துடன் அண்மையில் அம்பாறையில் உகுண பிரதெசத்தில் பிரபாகரனை நான் கொன்றேன் என்று ஜனாதிபதி கோட்டபாய சொன்னதே மனித உரிமை மீறலுக்கான பெரிய சாட்சியம் அதைவைத்தே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் இடம் வலியுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
Related Posts