சீன பாதுகாப்பு அமைச்சரின் கொழும்பு பயணம் குறித்து டில்லி கழுகுப்பார்வை

Politics 3 ஆண்டுகள் முன்

banner

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வீஃபெங் (Wei Fengh) உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இம்மாத இறுதியில் இலங்கை வரவுள்ளார்.





சீன பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் உறுதியானபோதிலும் திகதி விபரம் உத்தியோகப்பூர்வமாக வெளிவரவில்லை. எனினும் இம்மாதத்துக்குள் அவரின் விஜயம் உறுதியாகியுள்ளது.





இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அரச உயர்மட்ட பிரதிநிதிகளுடன் சீன பாதுகாப்பு அமைச்சர் பேச்சு நடத்தவுள்ளார்.





சீன கம்யூனிஸ்கட்சியின் உயர்மட்ட பிரமுகர் யெங் ஜியேச்சி கடந்த ஒக்டோபர் மாதம் உயர்மட்ட குழுவுடன் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.





அதன்பின்னர் சீனாவின் உயர்மட்ட அதிகாரியொருவர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் 2ஆவது சந்தர்ப்பம் இதுவாகும்.





அதேவேளை, சீன பாதுகாப்பு அமைச்சின் இலங்கை பயணம் தொடர்பில் இந்தியா தீவிர கவனம் செலுத்தியுள்ளது. அவரின் பயண நோக்கம் பற்றி இராஜதந்திர மட்டத்தில் கேள்வி எழுப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.