யாழில் அதிரடிப்படை துப்பாக்கிச்சூடு - இருவர் காயம்
Politics 3 ஆண்டுகள் முன்
விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு முள்ளி பகுதியில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தி்ல் துன்னாலையைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஒருவரின் காலில் துப்பாக்கி ரவை உள்ளதால் அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோத மணல் கடத்தல்காரர்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிலேயே இருவர் காயமடைந்துள்ளனர் என பாதுகாப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Posts