அரசுக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்தார் முறுத்தெட்டுவே தேரர்

banner

ஜனாதிபதி செயலாளர் பிபி ஜயசுந்தரவை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அபயராம விகாரையின் விகாராதிபதி முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் வலியுறுத்தினார்.





இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.





” நாட்டு மக்களின் ஆதரவை குறுகிய காலப்பகுதியில் இழந்த அரசாங்கமாக கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கமே காணப்படுகின்றது. ஜனாதிபதிக்கு இந்நிலைமை ஏற்படுவதற்கு பிபி ஜயசுந்தரதான் காரணம். எனவே, அவரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் பாரிய எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.





மக்களின் மனம் அறிந்த ஒருவரை அப்பதவிக்கு நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.” -எனவும் தேரர் வலியுறுத்தினார்.