ரணிலின் சக்கரை வியூகத்தால் கிலிகொள்ளும் எதிரணி

Politics 2 ஆண்டுகள் முன்

banner

” ஐக்கிய தேசியக்கட்சி வசம் தற்போது ஒரு ஆசனம்தான் இருக்கின்றது. அரசாங்க மற்றும் எதிரணி உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். எனவே, ஒன்று விரைவிலேயே 60 ஆக மாறும்.





பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு, அரசாங்கத்தையே முன்னெடுத்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒன்றை 60 ஆக்குவதென்பது சவாலுக்குரிய விடயமாக அமையாது.”





இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.





தேர்தல் ஆணைக்குழுவிடம் ரணிலின் பெயரை பரிந்துரைப்பதற்கான ஆவணத்தை கையளித்த பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.






https://www.youtube.com/watch?v=18t5wnioQdg