நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு

banner

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.





பிரேரணைக்கு ஆதரவாக 61 வாக்குகளும், எதிராக 152 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் மேலதிக வாக்குகளால் பிரேரணை மண்கவ்வியது.





அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக நேற்று இன்றும் சபையில் விவாதம் நடைபெற்றது. ஆளும் மற்று எதிரணி உறுப்பினர்கள் உரையாற்றினர். விவாதத்தின் முடிவில் இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.





அரசும் அதன் தோழமைக்கட்சிகளும் கம்மன்பிலவுக்கு சார்பாக வாக்களித்தன.