'ஒரே நாடு - ஒரே சட்டம்' - உடனடி மறுசீரமைப்பை கோருகிறார் சஜித்

banner

'ஒரே நாடு, ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணியை மீளாய்வுக்குட்படுத்தவும் - இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.





வத்தளையில் இன்று நடைபெற்ற கட்சி அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.





" மக்களை பிளவுபடுத்தும் வகையிலேயே ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு உறுப்பினர்கள் தேர்வு இடம்பெற்றுள்ளது. இது உடன் மீளமைக்கப்பட வேண்டும். அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நியமனங்கள் இடம்பெற வேண்டும்.





அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.





ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புட்ட அனைவருக்கும் , நீதிமன்ற கட்டமைப்பின்கீழ் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும். " - என்றார்.