இலங்கையர்கள் வெளிநாடு நோக்க படையெடுப்பது ஏன்?

Politics 2 ஆண்டுகள் முன்

banner

தமது வாழ்க்கையை மிகவும் சிறந்ததாக்கவும் வருமானத்தை அதிகரித்துக் கொள்ளவும் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.அது தவறான விடயமல்ல என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.





அது அவர்களின் எதிர்காலத்திற்கு சிறந்ததாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





கண்டியில் ஊடவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார்.





வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் எப்போதும் அந்த நாடுகளிலேயே வாழ்வதில்லை என்பதோடு, இவ்வாறு வெளிநாடுகளுக்கு செல்லும் பெரும்பாலானோர் மீண்டும் நாடு திரும்புகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





அத்துடன், நாட்டுக்குப் பெருமளவான அந்நிய செலாவணியை அவர்கள் பெற்றுத் தருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.